சேந்தமங்கலம், மார்ச் 27: சேந்தமங்கலம் பேரூராட்சி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சோமு கூலி தொழிலாளி. இவரது மகன் அன்பரசன் (30). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சோமு போன் செய்து, தனது மகன் அன்பழகன் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சிறப்பு எஸ்எஸ்ஐ முருகானந்தம் தனது டூவீலரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டிருந்தார். அங்கு அன்பரசன் குடிபோதையில் எஸ்எஸ்ஐ முருகானந்தத்தை தகாத வார்த்தையால் திட்டி டூவீலரின் சாவியை பிடுங்கி கொண்டு தாக்க முயன்றார். இது குறித்து எஸ்எஸ்ஐ சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்து சென்ற எஸ்ஐ பிரியா தலைமையிலான போலீசார் அன்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்எஸ்ஐயை தாக்க முயன்ற ரவுடி கைது
previous post