மேலூர், ஜன. 7: மேலூர் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா ஆலோசனைபடி, மேலூர் வட்டார வள மையத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடத்தப்பட்டது. உதவி திட்ட அலுவலர் கார்மேகம், வட்டார கல்வி அலுவலர்கள் அழகு மீனா, ஜெயசித்ரா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆகியோர் தன்னார்வலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.பயிற்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் கீதா, ஆசிரிய பயிற்றுநர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.