பெரியபாளையம்: எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், நீட் தேர்வை எதிர்த்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்படும் நிகழ்ச்சி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா ஏற்பாட்டில் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
திமுக ஒன்றிய செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். அப்போது மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல், தங்கம் முரளி, ஜான் பொன்னுசாமி, பொதுகுழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலின், பாஸ்கர், சுந்தரம், முகைதீன், சம்பத், ஒன்றிய அவைத் தலைவர் ரவிசந்திரன், சீனிவாசன், முனுசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் விமல்ராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அசோக்குமார், கார்த்தி, ஞானசேகர், பாபு, சந்திரசேகர், ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.