தர்மபுரி, ஜன.20: பாலக்கோடு அருகே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, எருதுவிடும் விழா நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100 காளைகள் பங்கேற்றன. பாலக்கோடு அருகே தண்டுகாரனஅள்ளி கிராமத்தில், நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையையொட்டி எருதுவிடும் விழா நடந்தது. விழாவில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முன்னதாக கிராம மக்கள் மேளதாளங்களுடன், கோ பூஜை செய்து காளைகளின் மேல் புனிதநீரை தெளித்தனர். ஊர்கவுண்டரின் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகளை கோயிலை சுற்றி ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு விரட்டி சென்றனர். எருதாட்டத்தை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். காளையை துரத்திச்சென்ற இளைஞரின் காலில் கயிறு மாட்டி, இழுத்துச் சென்ற காளையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எருதாட்ட விழா கோலாகலம்
previous post