Tuesday, May 14, 2024
Home » எம்பி.ராசா துவக்கி வைப்பு 2023 -2024 ம் ஆண்டிற்கு 4 தாலுகாக்களில் லோன் மேளா

எம்பி.ராசா துவக்கி வைப்பு 2023 -2024 ம் ஆண்டிற்கு 4 தாலுகாக்களில் லோன் மேளா

by Dhanush Kumar

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 2023 -2024ம் ஆண்டிற்கு டாம் கோ, டாப்செட்கோ கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 4 தாலுகாக்களிலும் லோன் மேளா நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையி னர் பொருளாதார மேம்பா ட்டுக் கழகம்மூலம் செயல்ப டுத்தப்படும் கடன் திட்டங்க ளான தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவி னைக் கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது. மேலும்,தமிழ்நாடு பிற்படுத் தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் (TA BCEDCO) மூலம் பிற்படுத்த ப்பட்டோர், மிகப் பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபி னர் வகுப்பினைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத் தை மேம்படுத்திட பொது கால கடன், தனிநபர் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலகடன்,பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சிறுகடன், கறவை மாட்டுக் கடன் போன்ற பல்வேறு கட ன் திட்டத்தின் கீழ் நிதியுத வி வழங்கப்பட்டுவருகிறது.

மேற்படி டாம்கோ, டாப்செ ட்கோ கடன் வழங்கும் திட் டம் குறித்து லோன் மேளா பெரம்பலூர் மாவட்டத்தில், தாலுகா வாரியாக வருகி ற 26ம்தேதி பெரம்பலூர் தாலுகாவில் குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூ ட்டுறவு கடன்சங்க கட்டிடத் திலும், 27ம் தேதி வேப்பந் தட்டை தாலுகாவில் தொ ண்டமாந்துறை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்திலும், 28ம் தேதி குன்னம் தாலுக் காவில்திருமாந்துறை தொ டக்க வேளாண்மை கூட்டுற வு கடன் சங்கக் கட்டிடத்தி லும், 30ம்தேதிஆலத்தூர் தா லுக்காவில் டி.களத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க கட்டி டத்திலும் லோன் மேளா நடைபெற உள்ளது. கடன் தொகைபெற விண் ணப்பதாரர் 18வயது முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத் தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். டாம்கோ கடன்பெற ஆண் டு வருமானம் கிராமப்புறங் களில் வசிப்பவர்களுக்கு ரூ98ஆயிரமும், நகர்ப்புறங் களில் வசிப்பவர்களுக்கு ரூ1.20லட்சமும் இருத்தல் வேண்டும். டாப்செட்கோ கடன் பெற ஆண்டு வருமா னம் ரூ3லட்சத்திற்குள் இரு த்தல் வேண்டும். லோன் மேளா நடைபெறும் நாளில் சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, திட்ட அறிக்கை(தொழில் செய்வதற்கு) போன்ற ஆவ ணங்களை எடுத்துவர வே ண்டும். மேற்படி லோன் மேளாவில் கலந்து கொண்டு டாம்கோ, டாப்செட்கோ கடன் திட்டங் களில் கடன் உதவிகளைப் பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

eleven + five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi