எட்டயபுரம், பிப். 28: எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலைய கடைகள், கழிப்பறை மற்றும் சமுதாய நலக்கூடம் ஆகியவற்றிற்கான ஓராண்டு குத்தகை ஏலம் நேற்று நடந்தது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், குறைந்த மாத வாடகை ₹3500க்கும், அதிகபட்சம் ₹9500க்கும், மற்ற கடைகள் இடைபட்ட தொகைக்கும் முடிவானது. கழிப்பறை மற்றும் சமுதாய நலக்கூடத்தை யாரும் ஏலம் எடுக்க முன் வரவில்லை என செயல் அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்தார். எட்டயபுரம் பஸ் நிலைய கடைகள் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனால் கடைகளில் மேற்கூரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கடைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் நிலைய வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டயபுரம் பஸ் நிலைய கடைகள் ஏலம்
previous post