Wednesday, June 12, 2024
Home » ஊட்டி படகு இல்லத்தில் படகுகள் இயக்குபவர்கள் திடீர் ஸ்டிரைக்

ஊட்டி படகு இல்லத்தில் படகுகள் இயக்குபவர்கள் திடீர் ஸ்டிரைக்

by kannappan

ஊட்டி : ஊட்டி படகு இல்லத்தில் துடுப்பு மற்றும் மோட்டார் படகுகள் இயக்குபவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி ஏரியில் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு மிதி படகுகள், துடுப்பு படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் உள்ளன. துடுப்பு மற்றும் மோட்டார் படகுகள் ஓட்டுவதற்கென சுமார் 40க்கும் மேற்பட்டோர் உள்ளனர். துடுப்பு படகு ஒரு டிரிப் ஓட்டினால் ஓட்டுபவருக்கு ரூ.55ம், மோட்டார் படகில் ஒரு டிரிப்பிற்கு ரூ.50ம் வழங்கப்படுகிறது.இப்படகுகளை ஓட்டுபவர்கள் டிக்கெட் கவுண்டர் அருகே கூட்டமாக நின்று கொண்டு துடுப்பு மற்றும் மோட்டார் படகில் பயணிக்க டிக்கெட் வாங்கும் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதற்கு போட்டி போடுவதாகவும், இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து டிக்கெட் கவுண்டர் முன் கூட்டம் போட வேண்டாம் எனவும், இருவர் மட்டும் நின்று வரிசைப்படி அழைத்து செல்ல அனுமதிக்குமாறும் டிக்கெட் கவுண்டரில் இருந்த ஊழியர்களிடம் படகு இல்ல மேலாளர் தெரிவித்துள்ளதாக ெதரிகிறது. டிக்கெட் கவுண்டர் ஊழியரும் மேலாளர் தெரிவித்தது குறித்து படகு இயக்குபவர்களிடம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் மேலாளர் தங்களை அவதூறாக பேசியதாக கூறி நேற்று காலை துடுப்பு மற்றும் மோட்டார் படகு இயக்குபவர்கள் அனைவரும் படகுகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படகு இல்லத்தில் மிதி படகுகள் மட்டுமே இயங்கின. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் துடுப்பு மற்றும் மோட்டார் படகுகள் இயங்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து படகு இயக்குபவர்களிடம் மேலாளர் சாம்சன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவு செய்யாமல் படகு இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து 12 மணிக்கு பின் படகுகள் இயக்கப்பட்டன. …

You may also like

Leave a Comment

14 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi