ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள் தோறும் மழை கொட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளும், சுற்றுலா தலங்களை முழுமையாக காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நேற்றும் வழக்கம்போல், பகல் 12 மணிக்கு ஊட்டியில் கன மழை பெய்ய துவங்கியது. சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால், ஊட்டி நகரின் மையப் பகுதியில் செல்லும் கோடப்பமந்து கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், மத்திய பஸ்நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் அடியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நின்றது.மழைநீர் 5 அடிக்கு மேல் தேங்கி நின்றதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல், உள்ளூர் மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.சேரங்கிராஸ் பகுதியிலும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்….