Saturday, June 1, 2024
Home » உயிர்ப்பிக்கும் தமிழர்களின் நாகரீகம்!: அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு..!!

உயிர்ப்பிக்கும் தமிழர்களின் நாகரீகம்!: அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிப்பு..!!

by kannappan

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடி, அகரம்,  மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் இதுவரை 6 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. 7ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  அகரத்தில் தோண்டப்பட்ட ஒவ்வொரு குழியிலும் பானைகள் கிடைத்துள்ளன. சிறுசிறு பானைகள் தவிர, கெண்டி மூக்கு பானை உள்ளிட்ட வித்யாசமான பானைகளும் கிடைத்துள்ளது. தனித்தனி பானைகள் தவிர ஒரேகுழியில் 2 முதல் 5 பானைகள் வரை கிடைத்துள்ளன. இதுவரை அகரத்தில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட பானைகள் முழுமையாக கிடைத்துள்ளன. இந்நிலையில் அகரம் அகழாய்வு தளத்தில் 8 அடி ஆழத்தில் புதிதாக மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒரு குழியில் 15 சுடுமண் உறைகள் கொண்ட 15 அடி உறைகிணறும், மற்றொரு குழியில் 8 சுடுமண் உறைகள் கொண்ட 8 அடி உறைகிணறும் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது 3வது உறைகிணற்றை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக தெரிவித்துள்ளனர். …

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi