திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே சேப்பாடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண சர்மா (49). அங்குள்ள ஒரு கோயிலில் மேல்சாந்தியாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் பக்தர்கள் இல்லாத நேரத்தில் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் இருந்து கிருஷ்ண சர்மா பணத்தை திருடி உள்ளார். இதன் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. புகாரின் பேரில் மண்ணஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ண சர்மாவை கைது செய்தனர்….