உடுமலை, ஆக.15: உடுமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்துக்குள் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடியது. இதனால், பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுவதாக நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.
இதன் எதிரொலியாக, நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர். சாக்கடை உடைப்பு சீரமைக்கப்பட்டு, கழிவுநீர் வெளியேறுவது தடுக்கப்பட்டது. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.