உசிலம்பட்டி, செப். 22: உசிலம்பட்டி அருகேயுள்ள பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லான மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆசிரியர் காசிமாயன் வரவேற்புரையாற்றினார். ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம் கலந்து கொண்டு மாணவ- மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இவ்விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகபொறுப்பாளர்கள் நாகேந்திரன், செல்வம், பால்பாண்டி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கவிதா, ஊராட்சி மன்ற துணை தலைவர் கோவிந்தபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பட்டது.