Saturday, May 18, 2024
Home » ஈ.வி.கே.எஸ், திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் புறக்கணிப்பு: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: சென்னைக்கு 7 மாவட்ட தலைவர்கள்: எச்.வசந்தகுமார் மகனுக்கு பதவி

ஈ.வி.கே.எஸ், திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் புறக்கணிப்பு: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: சென்னைக்கு 7 மாவட்ட தலைவர்கள்: எச்.வசந்தகுமார் மகனுக்கு பதவி

by kannappan

சென்னை: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். சென்னைக்கு மட்டும் 7 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் பட்டியலில் ஈ.வி.கே.எஸ்., திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் இருந்து வந்தார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். அவர் தலைவராக பொறுப்பேற்றதும் புதிய நிர்வாகிகள் யாரையும் நியமிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று அதிரடியாக அறிவித்தார். அதன்படி துணை தலைவர்களாக முன்னாள் எம்எல்ஏ பலராமன், ஊடகபிரிவு தலைவர் அ.கோபண்ணா, நாசே ராமச்சந்திரன், ஆர்.தாமோதரன், ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ டி.என்.முருகானந்தம், பொன் கிருஷ்ணமூர்த்தி, கே.ஐ.மணிரத்னம், டாக்டர் கே.விஜயன்,  முன்னாள் எம்பி பி.தீர்த்தராமன், முன்னாள் எம்எல்ஏ வாலாஜா ஜெ.ஹாசன், ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி, செந்தமிழ் அரசு, முன்னாள் மேயர் சுஜாதா, அழகு ஜெயபால், ராபர்ட் புரூஸ், எஸ்.ராஜா தம்பி, டி.எல்.சதா சிவலிங்கம், இமயா கக்கன்,  கிழானூர் ராஜேந்திரன், சாமுவேல் ஜார்ஜ், கே.செந்தில்குமார், டாக்டர் சுபா சோமு, ராமசுகந்தன், ஆர்.செழியன், ரங்கா பூபதி, ஏகதர் ஆனந்தன், குலாம் முகைதீன்,  எஸ்.எம்.இதயதுல்லா, சுவர்ணா சேதுராமன், முத்துகுமார் ஆகிய 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது செயலாளர்களாக டி.செல்வம், தணிகாச்சலம், பி.தாமோதரன், முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு, கே.சீரஞ்சிவி, என்.அருள் பெத்தையா, முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், என்.ரங்கபாஷ்யம், விஜய் வசந்த், எஸ்.டி.ராமச்சந்திரன், கார்த்தி தங்கபாலு, திருமகன் ஈவேரா, இல.பாஸ்கர், எம்.எஸ்.காமராஜ், எம்.எம்.டி.ஏ.கோபி, காண்டீபன், ஏ.எஸ்.பி.ஜான்சி ராணி, பி.வி.தமிழ்ச்செல்வன், ஏ.எ.ஸ்.இளஞ்செழியன் உள்பட 57 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளராக ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில ெசயலாளர்களாக கடல் தமிழ்வாணன், அகரம் ேகாபி உள்பட 104 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, ஆர்.பிரபு, மணிசங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், சி.டி.மெய்யப்பன், எம்பிக்கள் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ், எம்எல்ஏக்கள் விஜயதாரணி, பிரின்ஸ், ஆர்.கணேஷ், ராஜேஷ்குமார், எஸ்.டி. நெடுஞ்செழியன்,எஸ் பாண்டி, காளிமுத்து, முன்னாள் எம்பி ராமசுப்பு, பி.விஸ்வநாதன், தேவதாஸ் மற்றும் சுமதி அன்பரசு  உள்ளிட்ட 56 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு 7 மாவட்ட தலைவர்கள்: சென்னை வடகிழக்கு மாவட்ட தலைவராக எம்.எஸ்.திரவியம், சென்னை வடமேற்கு மாவட்ட தலைவராக ஜெ.டெல்லிபாபு, மத்திய கிழக்கு மாவட்ட தலைவராக சிவராஜசேகரன், மத்திய மேற்கு மாவட்ட தலைவராக எம்.பி.ரஞ்சன் குமார், தென்கிழக்கு மாவட்ட தலைவராக அடையாறு துரை, சென்னை தெற்கு மத்தியம் எம்.ஏ.முத்தழகன், சென்னை தென்மேற்கு மாவட்ட தலைவராக நாஞ்சில் பிரசாத், தூத்துக்குடி தெற்கு ஊர்வசி அமிர்தராஜ், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக ஆர்.எஸ்.செந்தில்குமார், காஞ்சிபுரம் மாவட்ட தலைவராக அளவூர் நாகராஜ், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவராக டி.ரமேஷ், திருவள்ளூர் வடக்கு ஏ.ஜி. சிதம்பரம் உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதேபோல் தேர்தல் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி தலைமையில் 34 பேரும், தேர்தல் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் 19 ேபரும், தேர்தல் பரப்புரைக்குழு தலைவராக திருநாவுக்கரசர் எம்பி தலைமையில் 38 பேரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 24 பேர், பப்ளிசிட்டி கமிட்டி தலைவராக கே.வி.தங்கபாலு தலைமையில் 31 பேரும், மீடியா ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஏ.கோபண்ணா தலைமையில் 16 பேரும், தேர்தல் நிர்வாக குழு தலைவராக கே.ஆர்.ராமசாமி தலைமையில் 6 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக அந்த பதவியில் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் பட்டியலில் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. …

You may also like

Leave a Comment

four × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi