ஈரோடு, செப். 11: ரோட்டில் 3 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை 1,108 பேர் எழுதினர். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) மூலம் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வு ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, செங்கோடம்பாளையத்தில் உள்ள யு.ஆர்.சி. மெட்ரிக் மேல்நிலை பள்ளி, ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி ஆகிய 3 மையங்கள் நடந்தது.
இத்தேர்வை எழுத 13 மாற்றுத்திறனாளிகள் உட்பட 1,199 பேர் விண்ணப்பித்திருநத்னர். எழுதினர். இதில், 3 பேர் ஸ்கிரைப்(சொல்வதை எழுதுபவர்) மூலம் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வானது ஓ.எம்.ஆர். முறையில் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. தேர்வினை 1108 பேர் எழுதினர். 191 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு பணியில் 80 அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.