ஈரோடு, மே 22: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தினசரி பாதிப்பு 9 வரை பதிவாகி வந்த நிலையில் தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. பாதிப்பை காட்டிலும் குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சுகாதாரத் துறையினர் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 889 ஆக உள்ளது. பாதிப்பில் இருந்து மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் 736 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தற்போது, ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.