Sunday, May 12, 2024
Home » ஈராக்கில் அரசியல் நெருக்கடி: சதர் ஆதரவாளர்கள்- ஈரான் ஆதரவு குழுக்கள் இடையே பயங்கர மோதல்… 15 பேர் பலி

ஈராக்கில் அரசியல் நெருக்கடி: சதர் ஆதரவாளர்கள்- ஈரான் ஆதரவு குழுக்கள் இடையே பயங்கர மோதல்… 15 பேர் பலி

by kannappan

பாக்தாத்: ஈராக்கில் ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், ஈரான் ஆதரவு குழுக்களுக்கும் இடையே நடந்த மோதலில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரானில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் இழுப்பறி நீடித்து வருகிறது. அதிகபட்சமாக 73 இடங்களை வென்ற ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல்-சதரின் கட்சி ஈரான் ஆதரவு குழுக்கள் ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியலில் இருந்து விலகுவதாக சதர் நேற்று அறிவித்தார். அதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனிடையே சதரின் ஆதரவாளர்களுக்கும், ஈரான் ஆதரவு குழுவினருக்கும் இடையே நடந்த ஆயுத மோதலில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாக்தாத்தில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் யார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த கூடாது என்று ராணுவத்திற்கு இடைக்கால பிரதமர் முஸ்ஃதபா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இலங்கையில் நடந்த சம்பவங்களை போன்று ஈராக் அரசின் அதிகாரபூர்வ மாளிகையை  கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தனர். பாக்தாத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் தொடர்ந்துவரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அனைத்து  தரப்பினரும் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக சதர் அறிவித்துள்ளார். ஈராக்கில் முக்கிய தழுவராக பார்க்கப்படும் சதர் ஒருகாலத்தில் அமெரிக்கா மற்றும் ஈராக் அரசு படைகளுக்கு எதிரான போராளி குழுவிற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர் ஆவார்.          …

You may also like

Leave a Comment

six − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi