குய்டோ: தென்அமெரிக்க நாடுகளான ஈக்குவடார், பெருவில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பங்களில் சிறுமி உள்பட மொத்தம் 15 பேர் பலியாகினர். ஈக்குவடார் நாட்டின் கடற்கரை மாகாணமான கயாஸ் மாகாணத்தின் பாலோ நகரிலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 66.4 கிலோ மீட்டர் ஆழத்தில் உண்டான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவாகியுள்ளது.