இளையான்குடி, பிப்.23: வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் நாற்பது எம்பி தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தி, திமுக தலைமை கழகம் சார்பில் நாற்பதுக்கு நாற்பது பிரசார வாகனம் மூலம் திரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. நேற்று இளையான்குடி பகுதிக்கு வந்த பிரசார வாகனத்தை முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கண்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்றாகீம், இளைஞரணி துணை அமைப்பாளர் இப்ராஹிம்சா, மாவட்ட பிரதிநிதிகள் உதயசூரியன், தெட்சிணாமூர்த்தி, சத்தியேந்திரன், பிரபு, சேதுராமன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வரவேற்றனர். இளையான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம், புதூர், குமாரகுறிச்சி, பெரும்பச்சேரி ஆகிய இடங்களில் திமுகவின் சாதனைகளையும், பாஜக அரசின் வேதனைகளையும் பொதுமக்களுக்கு திரை மூலம் காண்பிக்கப்பட்டது.