உசிலம்பட்டி, ஜூலை 15: உசிலம்பட்டி பட்டறைத்தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (24). வெல்டிங் பணி செய்யும் இவருக்கும், கீழப்புதூரைச் சேர்ந்த கோபிகா (19) என்பவருக்கும் கடந்த ஜூன் 1ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று பிரேம்குமார் பணிக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோபிகா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஒன்றரை மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த தற்கொலை குறித்த ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.