சேலம், ஏப்.10: சேலம் சின்னகொல்லப்பட்டி காளியம்மன் கோயில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராதிகா (22). இவருடைய தம்பி தனுஷ் கோயில் திருவிழாவையொட்டி தனியார் சுவற்றில் வால் போஸ்டர் ஒட்டியுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (33), விக்னேஷ்(31) ஆகிய இரண்டு வாலிபர்களும் சேர்ந்து தனுசிடம் தகராறில் ஈடுபட்டு கைகளால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அந்த வாலிபர்களிடம் ராதிகா சென்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குடன் வாய் தகராறு முற்றியதில், இருவரும் சேர்ந்து ராதிகாவை கடுமையாக தாக்கியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இளம்பெண்ணை தாக்கிய வாலிபர்கள் 2 பேர் கைது
previous post