விராலிமலை, ஏப்.13:இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து இருவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலுப்பூர் சுற்றுப் பகுதிகளில் அனுமதியின்றி ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் அள்ளப்படுவதாக இலுப்பூர் போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இலுப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, இலுப்பூர் அருகே உள்ள பையூர் பேருந்து நிறுத்தம் அருகே மணல் அள்ளி வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அதில் ஒரு யூனிட் மணல் அனுமதியின்றி அள்ளி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், இதில் ஈடுபட்ட கரந்த பட்டியைச் சேர்ந்த ரமேஷ். டிராக்டர் ஓட்டுநர் சபரி ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.