Thursday, May 9, 2024
Home » இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி

இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி

by Ranjith

 

சிவகங்கை, மார்ச் 24: சிவகங்கை பகுதியில் நடந்த விபத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக வாட்ச்மேன் உள்பட இருவர் பலியாயினர்.  சிவகங்கை எம்ஜிஆர் காலனியை சேர்ந்தவர் சன்னாசி மகன் காமராஜ்(47). இவர் சிவகங்கை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது உறவினர் பரமக்குடியை சேர்ந்த மருதுபாண்டியும் சிவகங்கை அருகே சோழபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு நேற்று காலை சிவகங்கை நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சோழபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரி முன்புறம் வந்துகொண்டிருந்த போது பின்னால் வந்த மினிபஸ் டூவீலரில் மோதியது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த நிலையில் காமராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மருதுபாண்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை புத்தர் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (64). கொட்டகை அமைக்கும் தொழில் செய்யும் இவர் நேற்று காலை மதுரையில் செவியலியராக பணிபுரியும் தனது மகளை சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து அழைத்து வர டூவீலரில் சென்றார். அரண்மனைவாசல் முன்பு வரும்போது டிப்பர் லாரி டூவீலரில் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi