தாம்பரம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (40). இவரது மனைவி சுனிதா. டெய்லரிங் வேலை செய்து வருகிறார். சிட்லப்பாக்கம் அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் துணியை கொடுக்க சென்றுள்ளார். அங்கு வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். துணியை கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது அவரது வாகனம் மாயமாகி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிட்லப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிட்லப்பாக்கம் போலீசார் எம்.ஐ.டி மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அவர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஆனந்த் (21) என்பதும், சுனிதாவின் இரு சக்கர வாகனத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபர் திருடிய 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….