விராலிமலை, செப். 4: இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இதில் இலுப்பூரில் 2.9 செ.மீ மழை பதிவானது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வாட்டி வதைத்தது. வெயிலின் கொடுமைக்கு மத்தியில், கடந்த 4 நாட்களாக மாலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையால், சுற்றுப்பகுதிகளில் இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில், நேற்று மாலை 5.30 மணியளவில் தொடங்கிய மழை, இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்தது. இதில் ஒரே நாள் இரவில் இலுப்பூரில் 2.9 செ.மீ, அன்னவாசலில் 2 செ.மீ, விராலிமலையில் 1.6 செ.மீ மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்தது: இலுப்பூரில் 2.9 செ.மீ மழை பதிவு
previous post