தர்மபுரி, ஏப்.14: தர்மபுரி பாரதிபுரம் தமிழர்மரபு சந்தையில் இயற்கை வேளாண்மை விளக்க பயிற்சி நடைபெற்றது. முகாமில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய இயற்கை வேளாண்மையின் தேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கி மாணவர்கள் பயிற்சி அளித்தனர். மேலும், தமிழர் மரபு சந்தை குழுவினரின் உதவியுடன் பொதுமக்களுக்கு பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் தானியங்கள் குறித்த கண்காட்சியை நடத்தினர். முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இயற்கை வேளாண்மை பயிற்சி
previous post