சென்னை: இயக்குனர்கள் அரசியல்வாதியோ, விஞ்ஞானியோ அல்ல என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இயக்குனர் வெற்றி மாறன், அங்கு நடந்த விவாத அரங்கில் கலந்து கொண்டு பேசியதாவது: இன்றைய உலகம் பிளவுபட்டு இருக்கிறது. ஒருவர் இடதுசாரியாக இருக்க வேண்டும் அல்லது வலதுசாரியாக இருக்க வேண்டும். மய்யம் என்ற ஒன்றே கிடையாது. மய்யம் என்று சொல்பவர்களும் வலது சாரிதான். ஒரு இயக்குனர் அரசியல்வாதியோ, கணித மேதையோ, விஞ்ஞானியோ அல்ல. அவர் ஒரு கலைஞர் தான். அவர் எந்த பிரச்னைக்கும் தீர்வு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தான் வாழ்க்கையில் கண்டதை அவர் திரையில் பிரதிபலிக்கிறார். ஒரு பகுதியில் நான் கற்க, புரிந்துகொள்ள அல்லது அதிலிருந்து வெளியே சொல்ல ஏதாவது இருந்தால் அங்கு செல்வேன். அங்குள்ள மக்களை புரிந்துகொள்ள முயற்சி செய்வேன். அவர்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்வேன். அதை வைத்து கதை தயாரிக்க முயற்சிப்பேன். சில நேரங்களில் அந்த கதையை சொல்ல முடியாமல் தோல்வி அடைந்துள்ளேன். ஆனாலும் அதை சரியாக காட்டுவது முக்கியம்….