ஆக்ரா: ஒவ்வொரு மாதமும் முழு நிலவு நாளிற்கு 2 நாட்கள் முன்பு தொடங்கி, முழு நிலவு நாளிற்கு 2 நாட்கள் கழித்து என மொத்தம் 5 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் தாஜ்மகாலை இரவில் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தனர். முழு நிலவு நாளில் தாஜ்மகாலின் வெண் நிற மார்பிள் கற்கள் கூடுதல் அழகுடன் மிளிர்வதை கண்டு களிக்கலாம். கொரோனா ஊரடங்கினால் கடந்தாண்டு மார்ச் 17ம் தேதி முதல் தாஜ்மகாலை இரவு நேரத்தில் பார்வையிடுவதற்கான அனுமதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் இது இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ண்கர் கூறுகையில், “தாஜ்மகாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்ட் 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரவு 8:30-9:00, 9:00-9:30, 9:30-10:00 ஆகிய நேரங்களில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஒரு நேரத்தில் 50 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக, ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்,’’ என்றார்….
இன்று முதல் தாஜ்மகாலின் அழகை இரவிலும் ரசிக்கலாம்
previous post