கோவை ஜூன் 10: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று (10ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும். இந்த குறைதீர் முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, அலைபேசி எண் மாற்றம் தொடர்பான குறைகளை மனுக்களாக கொடுத்து பொதுமக்கள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.