Friday, May 10, 2024
Home » இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் நிறுத்தம் வந்தவாசி அருகே ெசன்னை வாலிபருடன் அதிகாரிகள் அதிரடி

இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் நிறுத்தம் வந்தவாசி அருகே ெசன்னை வாலிபருடன் அதிகாரிகள் அதிரடி

by Karthik Yash

வந்தவாசி, ஜன.21: வந்தவாசி அடுத்த ஆலியூர் கிராமத்தில் இன்று நடக்க இருந்த சிறுமி திருமணத்தினை அதிகாரிகள் அதிரடியாக தடுத்து நிறுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் 17 வயது மகள் வந்தவாசியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த உறவினர் மகனுக்கும் இன்று கிராமத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மணப்பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கும், வந்தவாசி மகளிர் போலீசாருக்கும் ரகசிய தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, வடவணக்கம்பாடி போலீஸ் ஏட்டு ராகவன், பெரமணமல்லூர் வட்டார சமூக நலத்துறை அலுவலர் அஞ்சலிதேவி ஆகியோர் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமியின் பெற்றோர்களிடம் திருமணம் வயது குறித்தும், குழந்தை திருமணம் செய்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக்கூறி எச்சரித்தனர். மேலும், திருமணத்ைத தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

twenty − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi