துபாய்: இந்தியாவில் 2 வாரங்கள் தங்கியிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரும் பயணிகளுக்கான வருகை விசாவிற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் பெரும்பாலான நாடுகளில் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சமீபத்தில் பயணக்கட்டுப்பாடுகளை சற்று தளர்த்தியது. விசா அல்லது அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் குடியுரிமை வைத்திருப்போர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பயணி ஒருவர், அமெரிக்கா விசாவை வைத்திருக்கும் இந்திய குடிமகன் அபுதாபிக்கு வந்து, வருகை விசா மூலமாக தனிமைப்படுத்துதல் இல்லாமல் துபாய் செல்ல முடியுமா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள எத்தியாட் ஏர்வேஸ் நிறுவனம்,‘‘இந்தியாவில் 14 நாட்கள் தங்கியிருந்து வரும் பயணிகளுக்கான வருகை விசா (விசா ஆன் அரைவல்) வசதியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது. …