ஊட்டி, மார்ச் 6: நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளராக வாஞ்சிநாதன் கடந்த 2020ம் ஆண்டு அக்டோர் மாதத்தில் இருந்து இம்மாதம் வரை கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தற்போது மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு நீலகிரி மண்டல கூட்டுறவுத்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
இதில், சரக துணை பதிவாளர் மது, நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் குமாரசுந்தரம், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க துணை பதிவாளர் முத்துகுமார், நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு ெமாத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் அய்யனார், பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சை அமீர் அசன் முசபர் இம்தியாஸ் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.