கடையம்,ஜூன் 2: ஆழ்வார்குறிச்சி அருகே கல்யாணிபுரத்தில் திமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்க பிரசார கூட்டம் கடையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. ஆழ்வார்குறிச்சி பேரூர் அவைத்தலைவர் அல்லா பிச்சை, பேரூர் செயலாளர் அழகேசன், துணைச் செயலாளர்கள் ஆர்எஸ் பாண்டியன், சகுந்தலா, கணேசன், கண்ணன், ஒலி, பாண்டி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர் சக்தி சுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தொகுப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், மாநில பேச்சாளர்கள் பாண்டித்துரை, இஸ்மாயில் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மகளிருக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் வழங்கினார்.
கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், உதயநிதி மன்ற துணைச்செயலாளர் சிவா அருணன், மாவட்ட கவுன்சிலர் மைதின் பீவி கோதர் மைதீன், பக்கீர் மைதீன், சுடலைமுத்து,பெருமாள், புகாரி மீரா சாகிப், சசிகுமார், வின்சென்ட், முல்லையப்பன், ஜெயராணி அண்ணாதுரை, சதாம் உசேன், அரவிந்த், ஞானராஜ், ரவீந்திரன், மூர்த்தி, அம்பேத்குமார் ரவி, சுந்தரி மாரியப்பன், பாண்டிய ராணி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரம்யா, புஷ்பராணி, ஜஹாங்கீர், சந்திரன், பாண்டி, பலவேசம், சைலப்பன், கிருஷ்ணன், சேக் சையது மசூது, பாப்பு தங்கத்துரை, சுரேஷ், தளபதி பீர், ஈசாக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கண்ணன் நன்றி கூறினார்.
வி.கே.புரம்: விகேபுரத்தில் திராவிட மாடல் அரசின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. விகேபுரம் நகர திமுக இளைஞர் அணி சார்பில் நடந்த இக்கூட்டத்திற்கு இளைஞர் அணி நகர அமைப்பாளரும், நகராட்சி தலைவருமான செல்வ சுரேஷ் பெருமாள் தலைமை வகித்தார். நகர துணை அமைப்பாளர்கள் அருள் பிரகாஷ், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். திமுக நகரச் செயலாளர் கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் மைக் மணி, அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், நகராட்சி துணைத்தலைவர் திலகா, மாவட்டப் பிரதிநிதி இசக்கி பாண்டியன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் நெடுஞ்செழியன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் இசக்கி, சிற்றரசன், மகேந்திரன், அவைத்தலைவர் அதியமான், நகர பொருளாளர் ரவி, நகர துணை அமைப்பாளர்கள் ஐயப்பன், இசக்கி, வார்டு செயலாளர்கள் அகதீஸ்வரன், தென்னரசு, ராஜேந்திரன், ஷாஜகான், பழனி சுப்பிரமணியன், ஞானசேகர், மகளிர் அணி அம்பிகா மற்றும் கவுன்சிலர்கள் விக்னேஷ், ராமலட்சுமி, அருள் மணி, இயேசு ராஜா, கௌஹர் ஜான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.