நெல்லை, டிச. 1: நெல்லை வருங்கால வைப்புநிதி மற்றும் இஎஸ்ஐ இணைந்து நடத்திய மாதாந்திர குறை தீர்ப்பு முகாம் ஆலங்குளம் பஞ். யூனியன் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆலங்குளம், சுரண்டை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பிஎப் பென்சன் மற்றும் இஎஸ்ஐ தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை அமலாக்க அதிகாரி உலகநாதன், இஎஸ்ஐ கிளை மேலாளர் கவிதா ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் கணக்கு அதிகாரி கவுரவ் யாதவ், வீரக்குமார், செந்தில்முருகன் ஆலங்குளம் ஒன்றிய அலுவல மேலாளர் கல்யாண ராம சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.