சென்னை; ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணி வகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். தரப்பில் விண்ணப்பித்தால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது….