காளையார்கோவில், ஏப். 6:காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 129 ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வகத்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. நிறுவன முதல்வர் இளவரசு சிறப்புரையாற்றி துவங்கி வைத்தார். முதுநிலை விரிவுரையாளர்கள் கவிக்குயில் சாருமதி மற்றும் சேவற்கொடியோன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முதுகலை ஆசிரியர் காளிதாஸ், வட்டார வள மைய பயிற்றுநர் தனபாண்டி, பட்டதாரி ஆசிரியர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
மனோன்மணி, பரமேஸ்வரன், முத்துக்கருப்பன் ஆகியோர் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வகப் பொருள்களை கையாளுதல் மற்றும் பதிவேடுகளை பராமரித்தல் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மொழி ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை பார்வையிட்டனர்.