ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ. 13.35 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரம் நடைபெறும் கொப்பரை ஏலத்தின்போது, ஆனைமலை மற்றும் கோட்டூர், ஒடையக்குளம், சேத்துமடை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் கொப்பரையை கொண்டுவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், மழைக்காலத்தில் கொப்பரை வரத்து குறைவானது. நேற்று நடந்த ஏலநாளின்போது, 58 விவாசாயிகள் மொத்தம் 395 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். அவை, முதல் தரம் மற்றும் இரண்டாம் தரம் என தரம் பிரித்து, விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில் முதல் தரம் 210 மூட்டை கொப்பரை ரூ.71.50 முதல் ரூ.77.6 0வரையிலும், 185 மூட்டை இரண்டாம் தர கொப்பரை ரூ.59.60 முதல் ரூ.68 வரை என 19 டன் கொப்பரை மொத்தம் ரூ.13.35 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை 7 வியாபாரிகள் வாங்கி சென்றனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்….