ஆர்.எஸ்.மங்கலம்,நவ.7: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் அரசு மேல்நிலை பள்ளி எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் பள்ளி மாணவ,மாணவிகள் பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை தொடங்கி சிறுமழையிலேயே தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இப்பகுதியில் தற்போது மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே மழை காலங்களில் தண்ணீர் தேங்கி விடுவது வழக்கமாக உள்ளது.
இப்பகுதியில் உள்ள குடியிருப்புக்கு சரியான சாலை வசதி இல்லாததால் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்பகுதி மக்கள் இதுபோன்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்கும் விதமாக சரியான சாலை வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.