பாடாலூர், மார்ச் 13: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் விமலாராணி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கௌரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜயசாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் லோகமதி, ஆசிரியர் உமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இதையடுத்து மாணவ, மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி தன்னார்வலர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.