கந்தர்வகோட்டை : ஆதனக்கோட்டை பகுதியில் சூறாவளி காற்றுக்கு சோளப்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென காற்றும் மழையும் பலமாக வீசியது. இதற்கு வாழை மரங்களும், மரவள்ளி கிழங்கு செடிகளும், சோள பயிர்களும் ஆட்டம் கண்டு சாய்ந்தன.இதனை கண்ட விவசாயிகள் மனவேதனை அடைந்தனர். சோள பயிர் செய்திருந்த விவசாயி ஒருவர் இவ்வளவு செலவு செய்து, முக்காள் அளவு பயிர் சாய்ந்து போனதை கண்டு மனவேதனை அடைந்தனர்.இந்த நிலங்களில் இனி மாற்று விவசாயம் தான் செய்ய வேண்டும் என கூறினார். மின்சாரம் பல மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மக்கள் கூறும்போது மீண்டும் கஜா புயல் நினைவுக்கு வந்தது என்று வேதனையுடன் கூறினார்….