பேரையூர், அக். 5: பேரையூர் அருகேயுள்ள தும்மநாயர்கன்பட்டியை சேர்ந்தவர் அப்பாஸ் (42). இவரது செம்மறி ஆட்டை வீட்டில் கட்டி வைத்து விட்டு தோட்டத்து வேலைக்கு சென்று விட்டார். வீடு திரும்பி வந்து பார்த்த போது செம்மறி ஆட்டை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அப்பாஸ் அளித்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.