Sunday, May 19, 2024
Home » ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா ெகாடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா ெகாடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

by Karthik Yash

திருவண்ணாமலை, ஜூலை 21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவம் நாளை (22ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா மிகவும் பிரசித்திபெற்றது. அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூரம் பிரமோற்சவம் நாளை கோடிேயற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி, அன்று அதிகாலை 5.45 மணி முதல் 6.45 மணிக்குள், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆடிப்பூரம் பிரமோற்சவ கொடியேற்றம் நடைெபறும். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொடிேயற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதில், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில், கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா ஆடிப்பூர பிரமோற்சவம் மட்டும் என்பது தனிச்சிறப்பாகும். விழாவை முன்னிட்டு, நாளை மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறும். மேலும், ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாவின்போது, பூரம் நடத்திரம் அமையும் நாளன்று தீமிதி விழா நடைபெறும். அதன்படி, முதல் நாளன்றே பூரம் நட்சத்திரம் அமைவதால், நாளை இரவு 11 மணியளவில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழாவும் நடைபெற உள்ளது. சிவன் கோயில்களில் தீமிதி விழா நடைபெறும் சிறப்பும் அண்ணாமலையார் கோயிலுக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து, வரும் 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை தினமும் காைல மற்றும் இரவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் மாட வீதியில் பவனிவந்து அருள்பாலிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi