திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழாவை நேற்று மாணவர்கள் ேகக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ஏழுமலை, துணை தலைவர் தனசேகரன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சுகந்தி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் குமரேசன், தாட்சாயணி, ஜமுனா, மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை, அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. காஞ்சிபுரம்: உத்தரமேரூர் ஒன்றியத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் ஆசிரியர் தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.உத்தரமேரூர் ஒன்றியத்தில் உள்ள விசூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில் பள்ளி செல்லா பள்ளி இடைநின்ற குழந்தைகளுக்காக நடைபெற்று வரும் பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு, குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில்முருகன் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். முதுநிலை திட்ட மேலாளர் ராஜவேலன், திட்ட மேலாளர் ராகவன் பொறுப்பாளர் திலகவதி, ஆசிரியர் வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்….