அஞ்சுகிராமம்.பிப்.9: அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் ரூ.50 லட்சம் செலவில் எல்இடி மின்விளக்கு பொருத்தும் பணி நடந்தது. 7வது வார்டில் நடந்த நிகழ்சிக்கு கவுன்சிலர் கிறிஸ்டோபர் முத்தரசு தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, இளநிலை உதவியாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அழகப்பபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ் தொடங்கி வைத்தார். கவுன்சிலர்கள் பிரகாஷ், ஜார்ஜ் மலர்கொடி, பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
அழகப்பபுரம் பேரூராட்சியில் ₹ 50 லட்சம் செலவில் எல்இடி மின்விளக்குகள்
previous post