அறந்தாங்கி,ஏப்.20: அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்குபதிவுவாகி உள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 284 வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த மையங்களில் நேற்று ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 668 வாக்காளர்கள் வாக்கு செலுத்தி உள்ளனர். ராமநாதபும் தொகுதி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மொத்த வாக்கு சதவீதம் 68.80% வாக்கு பதிவாகி உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.