Friday, May 3, 2024
Home » அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை நீடாமங்கலம் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை நீடாமங்கலம் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

by Karthik Yash

நீடாமங்கலம், மே19: நீடாமங்கலம் பகுதியில் சாலை விரிவாக்கும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. நீடாமங்கலம் நகரப்பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் அகற்றும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தாசில்தார் பரஞ்ஜோதி தலைமையில் ரயில்வே கேட் வடக்குபுரம் பொக்ளின் இயந்திரம் மூலம் கடைகளின் முன் பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலை ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

10 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi