சென்னை: புத்தாண்டு விடுமுறை ஒட்டி தமிழ்நாடடில் உள்ள சுற்றுலா மையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது, சென்னை கடற்கரைகளில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுருந்த நிலையில், நேற்று கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்க பட்டது. இதை அடுத்து மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் குடும்பம் குடும்பமாக படையெடுத்து புத்தாண்டடை கொண்டாடினர். கடல் அலையில் கால்நினைத்தும், குதிரை சவாரி செய்து மகிழ்ந்த மக்கள் கடற்கரை மணல்பரப்பில் அமர்ந்தும் குடும்பத்துடன் இனிமையாக மகிழ்ந்தனர். இதனிடையே மெரினா கடற்கரையில் இருந்து இரவு ஒரே நேரத்தில் அனைவரும் வீடு திரும்பியதால் காமராஜர் சாலையில் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்ற நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் நடைபாதையில் பயணித்து சென்றனர். புத்தாண்டை ஒட்டி மாமல்லபுரத்தில் வெளிமாநிலம் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துருந்தனர், பின்னர் கடலில் குளித்தும் குதிரை சவாரி செய்தும். மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்து ரகம் ஆகிய இடங்களை பார்வையிட்டு செலஃபீ எடுத்து உற்சாகம் அடைந்தனர். பின்னர் தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற நாட்டிய விழாவில் 10ம் நாள் நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். புத்தாண்டை முன்னிட்டு கொசஸ்தலை இறுதி தடுப்பணையாக உள்ள சீமாவரம் தடுப்பணையில் 1000 கணக்கானோர் குவிந்தனர். தடுப்பண்ணை முழுமையாக நிரம்பி வழியும் நீரில், சிறுவர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதே போன்று ஆரணி அருகே தரை பலத்தை மூழ்கடித்து செல்லும் ஆரணி ஆற்றின் நீரில் நீச்சலடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.புத்தாண்டு விடுமுறையை ஒட்டி பெரியகுளம் கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவிக்கும் மேல் பகுதியில் தங்கியிருக்கும் நீர்நிலைகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் குடும்பங்களுடன் குளித்து மகிழ்ந்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணையில் ஒன்பது மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் நீரை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திரண்டனர். அணையோரத்தில் நின்று செலஃபீ எடுத்த பொதுமக்கள் படகு சவாரி செய்தும் நீச்சல் அடித்து குளித்து மகிழ்ந்தனர். சீர்காழி அருகே பூம்புகார் கடற்கரையில் மாலை நேரத்தில் திரண்ட பொதுமக்கள் கடல் அலையில் கால்நினைத்தப் படியும் மணல் பரப்பில் அமர்ந்து குடும்பத்துடன் பொழுதை களித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுங்கத்துறை மற்றும் சொத்தவிளை கடற்கரை பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரியன் மறையும் காட்சிகளை பார்த்து மகிழ்ந்தனர். தூத்துக்குடியில் முத்துநகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள படகு சவரிகளில் பயணம் செய்து புத்தாண்டை கொண்டாடினர். தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை (ஜன.2) பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதல் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டன. இதனிடையே அரையாண்டு முடிந்து சென்னையை நோக்கி ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். இதனால் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சுங்க கட்டணம் பாஸ்டேக் முறையில் வசூலிப்பதில் ஏற்பட்ட குழறுபடியால் தாமதம் காரணமாக வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. …
அரையாண்டு முடிந்து சென்னை திரும்பிய மக்கள், ஆத்தூர் சுங்கச்சாவடியில் 3 கி.மீ. தொலைவுக்கு வாகன நெரிசல்
previous post