அருமனை, மார்ச் 13 : அருமனையை அடுத்த பந்தல்விளை புதுவீட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் செல்வகுமார். அவரது மகன் ஷாலின்(32). அதே பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் மகன் அபின் (23) மற்றும் கிச்சு என்ற நிதின். இவர்கள் இருவருக்கும், ஷாலினுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷாலின் சம்பவத்தன்று இரவு சுமார் 9.30 மணியளவில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அபின் மற்றும் கிச்சு ஆகியோர் சேர்ந்து ஷாலினை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஷாலின் அருமனை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஷாலின் அளித்த புகாரின் பேரில் அபின் மற்றும் கிச்சு ஆகியோர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
அருமனை அருகே வாலிபர் மீது தாக்குதல்
previous post