சத்தியமங்கலம், செப்.20: புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், பள்ளியில் பயிலும் 90 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், தலைமை ஆசிரியர் சிவகாமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் புஷ்பா சின்னசாமி, மாவட்ட பிரதிநிதி சரவணகுமார், பனையம்பள்ளி ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி துணை தலைவர் நாகராஜ், வார்டு உறுப்பினர்கள் கவிதா பாண்டியன், தர்மன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.