காரிமங்கலம், மார்ச் 13: காரிமங்கலம் ஒன்றியம் எர்ரசீகலஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை ஜானகி ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சுதாகர் அண்ணாதுரை, கலீல் ஆகியோர் விழாவில் பங்கேற்று விளையாட்டு போட்டி மற்றும் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் லியாகத் அலி நன்றி கூறினார்.
அரசு பள்ளியில் ஆண்டு விழா
previous post