ராயக்கோட்டை, பிப்.9: ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயந்தி சம்பத் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் பிரபு வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சரசு முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் அனைத்து மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், முன்னாள் மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உதவித் தலைமை ஆசிரியர் சந்திரன் நன்றி கூறினார்.
அரசு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
previous post